காஞ்சிபுரம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேரணி

DIN

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் புதன்கிழமை பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கைஆழ்வார் தெரு வழியாக தேரடி பகுதியில் முடிவடைந்தது. இதில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT