காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : ஆட்சியர் வழங்கினார்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு ரூ.57 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால், ப்ரெய்லி கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். 
கூட்டத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவருக்கான தேசிய விருது கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி குடியரசுத் தலைவரிடமிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராயனுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆரோக்கியராயனுக்கு ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். 
ஆரோக்கியராயன் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, சலவை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். மேலும், இவர் தான் நடத்தி வரும் கடையில் இரண்டு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT