காஞ்சிபுரம்

ஏரியில் ஆண் சடலம் மீட்பு

DIN

மேவலூர்குப்பம் ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேவலூர்குப்பம் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் இறந்தவர் திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார்(30) என்பதும், இவர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஏரியில் இறந்து கிடந்தது தெரியவந்தது . அவர் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து ஏரியில் சடலத்தை வீசிச் சென்றனரா என ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT