காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ் (41). இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மணிமங்கலம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (42). இவர் கடன் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.