முகப்பு
காஞ்சிபுரம்

குழந்தைகள் நாடாளுமன்றத் தொடக்க விழா

கிராமப்புற மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் நாடாளுமன்றத் தொடக்க விழா செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் சிஆர்டிஎஸ் அமைப்பின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

கிராமப்புற மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் நாடாளுமன்றத் தொடக்க விழா செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் சிஆர்டிஎஸ் அமைப்பின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அமைப்பின் இயக்குநர் பெஞ்சமின் நேசமணி தலைமை வகித்தார். காரிதாஸ் இந்திய தொண்டு நிறுவனத்தின் மேலாளர் ஜான் ஆரோக்கிய ராஜ் முன்னிலை வகித்தார். டசோஸ் திட்ட அலுவலர் ஆனிரோஸ், லயோலா கல்லூரி பேராசிரியர் ஆண்ட்ரூ, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் 9 ஒன்றியங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த குழந்தைகள் நாடாளுமன்ற கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →