முகப்பு
காஞ்சிபுரம்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

காஞ்சிபுரம்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குள்பட்ட பட்டுநூல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுதா (26). இவர், அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் சுதா புதன்கிழமை பட்டுநூல்சத்திரம், ராமானுஜர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு இளைஞர்கள் சுதா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சுதா அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →