தொழிலாளர் நல வாரியம்: ஓய்வூதியம் பெறுவோர் ஏப்.30-க்குள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
ஓய்வூதியம் பெறுவோர் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட 15 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெறுவோர் அவசியம் ஓய்வூதியச் சான்றை சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, காஞ்சிபுரத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையகத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள், ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்ப்பிக்கவேண்டும். அதன்படி, ஓய்வூதியதாரர்கள் அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வந்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் அரசிதழ் பதிவு பெற்ற மத்திய மாநில அரசு அதிகாரியால் ஏப்ரல் 1- ஆம் தேதிக்கு பின் வழங்கப்பட்ட ஆய்வு சான்றை, தொழிலாளர் உதவி ஆணையரகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) 46பி-2, விளக்கடி கோயில் தெரு, ரங்கசாமி குளம் அருகில், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.
ஓய்வூதியதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்தால், அதற்கான சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.