காஞ்சிபுரம்

கூட்டுறவு வார விழா: ரத்த தான முகாம்

DIN


கூட்டுறவு வார விழாவையொட்டி வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65ஆவது கூட்டுறவு வார விழா புதன்கிழமை தொடங்கியது. இதனை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செங்கல்பட்டு சரகம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், காயரம்பேடு நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நந்தி வரம் கூடுவாஞ்சேரியில் உள்ள சமூக நலக்கூடத்தில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில், செங்கல்பட்டு சரக துணைப் பதிவாளர், கள அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர், சங்கப் பணியாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். முகாமில், 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT