காஞ்சிபுரம்

கட்டுமான விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

தினமணி

கட்டுமான விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ஆட்சியர் பா.பொன்னையா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
 காஞ்சிபுரம் மாவட்டம், கந்தன்சாவடி பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது அண்மையில் விபத்து ஏற்பட்டது. இதில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ராஜன் சௌத்ரி பலத்தகாயமடைந்தார். பின்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
 அவரது வாரிசுதாரரான மனைவி லலிதாதேவிக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ.5 லட்சம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அப்போது, தொழிலாளர் நல உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT