காஞ்சிபுரம்

சாலை சீரமைப்புப் பணி பூமி பூஜையுடன் தொடக்கம்

வடகால் பிரதான சாலை சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது.

தினமணி

வடகால் பிரதான சாலை சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது.
 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்கு உள்பட்ட வடகால் கிராமத்தில், வடகால் பிரதான சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வடகால் பிரதான சாலையை சீரமைக்க 14-ஆவது நிதிக் குழு மானியத்தின் மூலம், ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இச்சாலை சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது. இப்பணியை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி தொடங்கிவைத்தார். இதில், அதிமுக ஒன்றியச் செயலாளர் முனுசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்ராஜன், ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் சேதுராஜஇளவழகன், முன்னாள் ஊராட்சித் தலைவர் விமலாதேவிதர்மன் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள், அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT