காஞ்சிபுரம்

நவநீதகிருஷ்ணர் கோயிலில் கூடாரவல்லி உற்சவம்

DIN


மாமல்லபுரத்தில் உள்ள நவநீதகிருஷ்ணர் கோயிலில் மார்கழி மாத திருப்பாவை பஜனை உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது . 
இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை உற்சவத்தை பஜனை மண்டலி குழுவினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, அவர்கள் நாள்தோறும் அதிகாலை வேளையில் கோயில் மாடவீதிகள் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பஜனைப் பாடல்களைப் பாடியபடி செல்கின்றனர். இக்கோயிலில் மார்கழி மாதத்தின் 27-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது. 
இதையொட்டி நவநீதகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். அவருடன் மாமல்லபுரம் நகர வீதிகளில் திருப்பாவை பாடல்களைப் பாடியபடி பஜனை மண்டலி குழுவினர் வந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT