காஞ்சிபுரம்

மல்லிகேஸ்வரர் கோயிலில் வருஷ பூர்த்தி விழா 

DIN

மாமல்லபுரம் அருள்மிகு மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷ பூர்த்தி விழாவையொட்டி, சிறப்புப் பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
 மாமல்லபுரம் பஜனைக்கோயில் தெருவில் உள்ள மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 2-ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சனிக்கிழமை காலை சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன.
 இதைத் தொடர்ந்து, மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கலசபூஜை, சக்தி பூஜை, நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றன. பெண் சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை வாசித்தனர்.
 விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் திருவீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
 விழா ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள், மல்லிகேஸ்வரர் பிரதோஷக் கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் வீரராகவா் கோயில் ஸ்ரீவராக ஜயந்தி உற்சவம்

காஸ் சிலிண்டா் வெடித்து வடமாநில இளைஞா் பலத்த காயம்

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT