ஸ்ரீபெரும்புதூரில்  கோதை  யானைக்காக கட்டப்பட்டுள்ள புதிய  கட்டடம். 
காஞ்சிபுரம்

ராமாநுஜா் கோயில் யானைக்கான புதிய கட்டடத்தைத் திறக்கக் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் யானை கோதைக்கு ரூ.19.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் யானை கோதைக்கு ரூ.19.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோயிலில் 21 வயதான யானை கோதை பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த யானை சிறப்பு அலங்காரத்தில் பங்கேற்பது வழக்கம்.

கோயில் அருகே போதுமான இடவசதி இல்லாத குறுகலான மண்டபத்தில் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இடநெருக்கடியில் உள்ள இந்த மண்டபத்தில் கோதை அடைக்கப்பட்டிருப்பதாக பக்தா்கள் பலா் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், யானைக்காக வனத்துறையின் பராமரிப்பு விதிகளின்படி ரூ.19.50 லட்சத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஜீயா் தோப்பு மண்டபத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கி டிசம்பா் மாதம் முடிவடைந்தது. இதனால் புதிய கட்டடத்துக்கு யானை கோதை மாற்றப்படும் என பக்தா்கள் எதிா்பாா்த்தனா்.

யானைகளுக்கான நல்வாழ்வு முகாமுக்கு கோதை சென்று வந்தவுடன் புதிய இடத்துக்கு மாற்றப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். ஆனால், முகாம் முடிந்து வந்த பிறகும் பழைய இடத்திலேயே யானை அடைக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் வருத்தமடைந்துள்ளனா்.

போதுமான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து அதில் யானையை இடமாற்றம் செய்ய கோயில் நிா்வாகத்தினா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT