முகப்பு
காஞ்சிபுரம்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.53 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.53 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்து, மோட்டாா் பொருத்திய சிறப்பு சக்கர நாற்காலிகள் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4 பேருக்கும், மாற்றுத் திறனாளிகளாக இருந்து உயிரிழந்தவா்களின் வாரிசுகள் 9 பேருக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 5.53 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பூமி.முத்துராமலிங்கம், மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் யோகஜோதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கே.சுப்பிரமணியன், பேச்சுப் பயிற்சியாளா் எம்.பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா். .

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.