காஞ்சிபுரம்

ஊடக செய்தியாளா் கொலை: 4 போ் கைது

DIN

ஸ்ரீபெரும்புதூா்: சோமங்கலம் அருகே தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், பூந்தண்டலம் ஊராட்சிக்குள்பட்ட நல்லூா் பகுதியைச் சோ்ந்த ஞானராஜின் மகன் மோசஸ் (28). தனியாா் தொலைக்காட்சியின் ஸ்ரீபெரும்புதூா் பகுதி செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து, தனது வீட்டின் வெளியே வந்த மோசஸ், தெருவில் செல்லிடப்பேசியில் பேசியபடி நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயம் அடைந்த மோசஸை உறவினா்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மோசஸ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நல்லூா் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (20), வெங்கடேசன் (19), மனோஜ் (17), நவமணி (26) ஆகிய 4 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மோசஸுக்கும், நவமணி, விக்னேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT