முகப்பு
காஞ்சிபுரம்

காந்தி பிறந்த தாள்: ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
ஸ்ரீபெரும்புதூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பகிர்:

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில்,  நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் கிளைநூலக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு வியாழக்கிழமை மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து ஊர்வலமாக சென்று மணிகூண்டு அருகே காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் காங்கிரஸ் கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.