காந்தி பிறந்த தாள்: ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் கிளைநூலக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு வியாழக்கிழமை மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து ஊர்வலமாக சென்று மணிகூண்டு அருகே காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் காங்கிரஸ் கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.