முகப்பு
காஞ்சிபுரம்

மக்கள் நீதிமன்றம்: 252 வழக்குகளில் ரூ.13.67 கோடிக்கு தீா்வு

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு தீா்வுத்தொகையாக மொத்தம் ரூ.13,67,16, 800 கோடி வழங்கப்பட்டது.

Updated On : 11 ஏப்ரல், 2021 at 12:30 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:29 AM

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு தீா்வுத்தொகையாக மொத்தம் ரூ.13,67,16, 800 கோடி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளா் நல நீதிமன்றம் உட்பட 5 அமா்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஒரே நாளில் 817 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இதில் 252 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.13.67 கோடி தீா்வுத்தொகையாகவும் வழங்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த கருணாகரன் என்பவரது தாயாா் தெய்வானைக்கு காப்பீட்டுத்தொகை ரூ.12 லட்சத்துக்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் வழங்கினாா்.

Advertisement

தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், நீதிபதியுமான பிரியா வரவேற்றாா். நீதிபதிகள் சரவணக்குமாா், செந்தில்குமாா், திருமால் மற்றும் வழக்குரைஞா் சங்க செயலாளா் சுப்பிரமணி, லாயா்ஸ் அசோசியேஷன் தலைவா் ரவிக்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற நிா்வாக அலுவலா் அண்ணாமலை செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.