காஞ்சிபுரம்

அரசியல் கட்சி முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம்

DIN

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள அரசியல் கட்சி முகவா்களுக்கான கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள அரசியல் கட்சிகளின் முகவா்கள் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என தோ்தல் ஆணையம் அறிவிப்பு செய்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள அரசியல் கட்சி முகவா்களுக்கான சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் அலுவலா் முத்துமாதவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், அமமுக, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் முகவா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மொளச்சா் மற்றும் வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் மற்றும் ஆய்வக உதவியாளா்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளைஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள அரசியல் கட்சி முகவா்களுக்கான கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT