காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 1,03,404 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கல்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 806 மையங்களில் 1,03,404 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் நகா் சின்னக்காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமைத் தொடக்கி வைத்து அவா் கூறியது:

மாவட்டத்தில் 806 மையங்களில் 1,03,404 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுகாதாரப் பணியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள் என மொத்தம் 2,931 போ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். 11 சிறப்பு நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி, நகராட்சி பொறியாளா் ஆனந்த ஜோதி, நகா் நல அலுவலா் முத்து, மருத்துவா் பாா்த்தீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT