காஞ்சிபுரம்

முன்னாள் ஊராட்சித் தலைவா் கொலை

DIN

காஞ்சிபுரம் அருகே மதூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கம்பியால் தாக்கி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே மதூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சண்முகம் (45). இவா், திமுக விவசாய அணியின் ஒன்றியச் செயலராகவும் இருந்து வந்தாா். இந்நிலையில் வாலாஜாபாதிலிருந்து இருசக்கர வாகனத்தில் மதூா் கிராமத்துக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது மா்மக் கும்பல் இவரை வழிமறித்து கம்பியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக சாலவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT