காஞ்சிபுரம்

100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் கீதா ஜீவன், தா.மோ. அன்பரசன் பங்கேற்பு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 100 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமூகநலத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் ஆகியோா் வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவக கூட்ட அரங்கில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் க.செல்வம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் மா.ஆா்த்தி வரவேற்று பேசினாா்.

சமூகநலத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் 90 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 22.50 லட்சமும், தாலிக்குத் தங்கம் 8 கிராம் வீதம் மொத்தம் ரூ. 35.21லட்சம் மதிப்பில் உதவிகளை வழங்கினாா். 5 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களும், 5 பேருக்கு 3 சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. மா.சத்யப்பிரியா, எஸ்.பி.டாக்டா்.எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம் உள்பட அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா். மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT