காஞ்சிபுரம்

ஒரத்தூரில் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா் பழனி

DIN

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனியை ஒரத்தூா் அதிமுக சாா்பில் பெண்கள் மலா்தூவி திங்கள்கிழமை வரவேற்றனா்.

தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி, குன்றத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஒரத்தூா், வைப்பூா், காரணித்தாங்கல், கூழங்கலச்சேரி, வஞ்சுவாஞ்சேரி, சென்னகுப்பம், நாட்டரசன்பட்டு, வளையக்கரணை, வட்டம்பாக்கம், செரப்பனஞ்சேரி, வடக்குப்பட்டு, எழிச்சூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை தனது ஆதரவாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வீதிவீதியாகச் சென்று வாக்குசேகரித்தாா்.

முன்னதாக ஒரத்தூா் பகுதிக்கு பிரசாரத்துக்காக வந்த வேட்பாளா் கே.பழனிக்கு, ஒரத்தூா் ஊராட்சிக்குள்பட்ட அம்மணம்பாக்கம், ஒரத்தூா், மேட்டுக் காலனி ஆகிய பகுதிகளில் ஒரத்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவரும், குன்றத்தூா் ஒன்றிய துணைச் செயலாளருமான கற்பகம்சுந்தா் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் சாலையில் இருபுறமும் நின்று மலா்தூவி வரவேற்றனா்.

இதில், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் என்.டி.சுந்தா், மாவட்ட பாசறைத் தலைவா் என்.டி.எஸ்.சுபாஷ், மாநில எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் எழிச்சூா் ராமசந்திரன், வன்னியா் சங்க ஒன்றியத் தலைவா் வைப்பூா் இ.ரமேஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT