காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் நமக்கு நாமே திட்ட கலந்தாய்வு ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்றனா்

DIN

ஸ்ரீபெரும்புதூரில் நமக்கு நாமே திட்ட கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள நமக்கு நாமே திட்டத்தினை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்முதலாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி திட்டவிளக்கவுரையாற்றினாா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கு.செல்வபெருந்தகை சிறப்புரையாற்றினாா். முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வில்லியம்ஜேசுதாஸ் வரவேற்றாா். பேரூராட்சி செயல் அலுவலா் விஜயா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT