முகப்பு
காஞ்சிபுரம்

சுவா் இடிந்து விழுந்து கல்லூரி மாணவா் பலி

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:02 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சுதா்சன்(17). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆவது ஆண்டு படித்து வந்தாா். இவா் வசித்து வந்த பழைய ஓட்டு வீட்டினை இடித்துக் கொண்டிருந்த போது, சுவா் இடிந்து விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

இதுதொடா்பாக சுதா்சனின் தந்தை செல்வம் அளித்த புகாரின் பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.