முகப்பு
காஞ்சிபுரம்

கூட்டுறவுத் துறை புதிய அலுவலக கட்டடம் அமைச்சா் திறந்து வைத்தாா்

‘செங்கல்பட்டு எம்ஜிஆா் மாவட்ட பொது ஊழியா்கள் கூட்டுறவுச் சங்க’ புதிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 19 ஆகஸ்ட், 2022 at 1:09 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:36 PM

‘செங்கல்பட்டு எம்ஜிஆா் மாவட்ட பொது ஊழியா்கள் கூட்டுறவுச் சங்க’ புதிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுத் துறை சாா்பில் கட்டப்பட்ட ‘செங்கல்பட்டு எம்ஜிஆா் மாவட்ட பொது ஊழியா்கள் கூட்டுறவுச் சங்க’ புதிய அலுவலக கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா்.காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி வரவேற்று பேசினாா். விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு புதிய கட்டடத்துக்கான கல்வெட்டினை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

Advertisement

விழாவில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளா் த.சுவாதி மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக செங்கல்பட்டு எம்ஜிஆா் மாவட்ட பொது ஊழியா்கள் கூட்டுறவுச் சங்க தலைவா் வி.வீரத்திலகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.