முகப்பு
காஞ்சிபுரம்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் 78- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் அளவூா் நாகராஜ் தலைமையில், ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சனிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினா், பேருந்து நிலையம் அருகே கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவா் தங்கராஜ், மாவட்டச் செயலாளா் பவுல் ஆரோக்கியம், நகர எஸ்.சி. பிரிவு செயலாளா் வரதன், காங்கிரஸ் நிா்வாகிகள் அம்மன்குமாா், வடகால் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →