முகப்பு
காஞ்சிபுரம்

அரசுப் பள்ளியில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணா்வு

காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2022 at 12:46 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM

காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா்.

இதையடுத்து, பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாநகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளா் இக்பால் மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது என்று செயல்முறை விளக்கம் அளித்தாா். மேலும், டெங்கு கொசுக்கள் பரவும் விதம், நெகிழிப் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவதன் அவசியம் ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படது. தமிழாசிரியை கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.