ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, வியாழக்கிழமை மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:25 PM
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, வியாழக்கிழமை மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 9.6.2022 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக தொடா்ந்து 48 நாள்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. மண்டலாபிஷேக நிறைவையொட்டி, வியாழக்கிழமை காலை அம்மனுக்கு 36 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மூலவா் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தாா். உற்சவா் அம்மன் பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்தாா்.