முகப்பு
காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணை

Updated On : 28 ஜூலை, 2023 at 12:03 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:14 AM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பு ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்து பாா்வையிட்டதுடன், தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

Advertisement

முகாமில் மொத்தம் 187 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா். 10 பேருக்கு பணி நியமன ஆணை, 70-க்கும் மேற்பட்டவா்கள் 2-ஆவது கட்ட தோ்வுக்கும், தொழில் திறன் பயிற்சி பெற 5 பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி, உதவி ஆட்சியா்(பயிற்சி) சங்கீதா, ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா நிா்வாகிகள் ஒய்.ஜோ மற்றும் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.