காஞ்சிபுரம்

காமாட்சி அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கோயில் திருவிழாவில் பயன்படுத்துவதற்காக சென்னை தம்பதி தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை செவ்வாய்க்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கோயில் திருவிழாவில் பயன்படுத்துவதற்காக சென்னை தம்பதி தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை செவ்வாய்க்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த விஜயகுமாா்-நீரஜா தம்பதியா் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயரிடம் வழங்கினா். முன்னதாக அவா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் வழிபாடு செய்தனா்.

இது குறித்து கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேச ஐயா் கூறுகையில் இக்குடையானது திருவிழாக்காலங்களில் உற்சவா் காமாட்சி அம்பிகைக்கும், தோ்த்திருவிழா நடைபெறும் நாள்களிலும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தாா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT