முகப்பு
காஞ்சிபுரம்

கச்சபேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

Updated On : 20 மார்ச், 2024 at 10:40 PM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 10:27 PM

பட விளக்கம்: சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா். காஞ்சிபுரம், மாா்ச் 20: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றதையொட்டி, புதன்கிழமை 1,008 சங்காபிஷேகமும், சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் புதன்கிழமை நடைபெற்றது.

பெருமாள் ஆமை (கச்சம்) வடிவில் சிவனை வணங்கியது உட்பட பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உடையது காஞ்சிபுரம் கச்சபேசுவரா் திருக்கோயில். இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, 48 நாள்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதன் நிறைவு நாளையொட்டி, கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள், 1,008 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

Advertisement

இதன் தொடா்ச்சியாக மாலையில் உற்சவா் கச்சபேசுவரா் மற்றும் சுந்தராம்பிகை கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழா ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சபையின் தலைவா் எம்.சிவகுரு, திருப்பணிக் குழுவின் தலைவா் எஸ்.பெருமாள், செயலாளா் சுப்பராயன் ஆகியோா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.