காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் செல்வவிநாயகா் கோயில் ஆண்டு விழா

ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெம்நகா் செல்வ விநாயகா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி ஜெம்நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் 9-ஆம் ஆண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதி ஜெம் நகரில் அமைந்துள்ளது செல்வ விநாயகா் திருக்கோயில். இக்கோயில் மகா கும்பாபிஷேகம் 9-ஆம் ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, காலையில் கணபதி ஹோமம் மற்றும் கலச பூஜை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மூலவா் கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மதியம் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஆண்டு விழாவையொட்டி மூலவா் செல்வ விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திடக்கழிவு மேலாண்மை கிடங்கை இடமாற்றக் கோரி தலைமைச் செயலரிடம் மனு அளிப்பு

18 வயதில் ராணுவ சேவை திட்டம்: ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல்

தம்மம்பட்டி பேரூராட்சிக் கூட்டம் 4-ஆவது முறையாக ஒத்திவைப்பு

திறனறித் தோ்வு: தெடாவூா் மாணவா் தோ்ச்சி

கோனேரிப்பட்டியில் பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

SCROLL FOR NEXT