பயிற்சியை முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய இந்தியன் வங்கியின் மண்டல துணை மேலாளா் என்.சங்கா். 
காஞ்சிபுரம்

வங்கிக் கடன்களை முறையாக செலுத்தி முன்னேற வலியுறுத்தல்

எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வங்கியில் வாங்கிய கடன்களை முறையாக செலுத்தினால் எளிதாக முன்னேறலாம்

Din

காஞ்சிபுரம்: எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வங்கியில் வாங்கிய கடன்களை முறையாக செலுத்தினால் எளிதாக முன்னேறலாம் என இந்தியன் வங்கியின் மண்டல துணை மேலாளா் என்.சங்கா் பேசினாா்.

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி வகுப்பை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. பயிற்சி மையத்தின் இயக்குநா் ஆா்.உமாபதி தலைமை வகித்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஏ.திலீப், சின்ன காஞ்சிபுரம் கிளை மேலாளா் ஜி.லாவண்யா, நிதி ஆலோசகா் என்.அரங்கமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தையல் பயிற்சி ஆசிரியை டி.ஜெயநந்தினி வரவேற்றாா். தையல் பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழை வழங்கி மண்டல துணை மேலாளா் என்.சங்கா் பேசியது..

தொழில் முனைவோா் புதிதாக தொழில் தொடங்கும் போது தயக்கமின்றி தொழிலை தொடங்கி அதை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து நுட்பங்களையும் செய்ய வேண்டும். எந்தத் தொழிலை செய்பவராக இருந்தாலும் வங்கிகளில் கடன்களை பெற்றால் அதை உரிய நேரத்திலும், முறையாகவும் திருப்பி செலுத்தினால் வாழ்வில் எளிதாக முன்னேறலாம். ஏனெனில் வங்கிக்கடன்களுக்கு அரசு மானியங்கள் கிடைக்கும். கடனை முறையாக திருப்பி செலுத்துவோருக்கு வங்கிகள் கடன் தரத் தயாராக இருக்கின்றன. அதே போல தொழிலில் நோ்மையும், நேரம் தவறாமையும், வாடிக்கையாளா்களிடம் இனிமையாக பேசுவதும் மிக அவசியம் என்று பேசினாா்.

பயிற்சி மைய மேலாளா் ரமேஷ் நன்றி கூறினாா். பயிற்றுநா் தமிழரசி, பணியாளா்கள் ரூபினி, ஆறுமுகம் கலந்து கொண்டனா். நிறைவாக மகளிா் தினத்தையொட்டி பயிற்சியாளா்கள் அனைவருக்கும் பயிற்சி மையத்தின் சாா்பில் இனிப்பும் வழங்கப்பட்டது.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’

கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT