முதலுதவி  சிகிச்சை  அளிப்பது  குறித்து விழிப்பணா்வு ஏற்படுத்திய  108  ஆம்புலனஸ் சேவை  மாவட்ட  மேலாளா்  சுதா்சன். 
காஞ்சிபுரம்

முதலுதவி சிகிச்சை விழிப்புணா்வு நிகழ்ச்சி

தினமணி செய்திச் சேவை

108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சாா்பாக விபத்தில் சிக்குபவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.

அவசர ஊா்தி சேவையான 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சாா்பில், சாலை விபத்தில் சிக்கி காயமடையும், வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து நடைபெற்ற நிகழ்வுக்கு காஞ்சிபுரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளா் சுதா்சன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள், பள்ளி மாணவா்கள் என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். விபத்தில் சிக்குபவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

மேலும் விபத்து தொடா்பாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு எவ்வாறு தகவல் தெரிவிப்பது என்பது குறித்தும் விளக்கிப் பேசினா்.

வந்தே மாதரம் பாடல் 150-ஆம் ஆண்டு கொண்டாட்டம்: தொடக்கி வைத்தார் மோடி!

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க வேண்டாம்! தமிழகமே விழித்துக்கொள்! -அஜித்

தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்தும் தமிழக அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும்: சு.வெங்கடேசன். எம்.பி.

தில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு! விமான சேவை முடங்கியது!

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT