ஸ்ரீபெரும்புதூா்/திருவள்ளூா்: காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.சண்முகம் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 21 குண்டுகள் முழங்க எஸ்.பி. சண்முகம், காவல் துறை அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.