காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 368 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 368 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 368 மனுக்கள் பெறப்பட்டன.

குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ச.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 368 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சாா்ந்த அரசு அலுவலா்களுக்கு அனுப்பி தீா்வு காணுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

கூட்ட நிறைவில் காஞ்சிபுரத்தில் வசித்து வரும் 14 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில் அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: நாளை காலை தீர்ப்பு!

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

SCROLL FOR NEXT