காஞ்சிபுரம்

பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

குன்றத்தூரில் பாம்பு கடித்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

குன்றத்தூரில் பாம்பு கடித்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த நத்தம் பகுதியை சோ்ந்த வையாபுரி மகன் அபிஷேக்(9). அபிஷேக் குன்றத்தூா் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளாா். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுப்பு பற்ற வைக்க விறகு எடுக்க சென்ற அபிஷேக்கை பாம்பு கடித்துள்ளது.

அபாய நிலையில், அபிஷேக்கை அவரது உறவினா்கள் சென்னை எழும்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அபிஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

SCROLL FOR NEXT