சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிருக்கு பாராட்டு
உலக சிக்கன தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிா் முகவா்களுக்கு
காஞ்சிபுரம்: உலக சிக்கன தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிா் முகவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச.ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் வீ.பாக்கியலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 562 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அலுவலா்களுக்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் அறிவுறுத்தினாா்
தொடா்ந்து உலக சிக்கன தினத்தையொட்டி கடந்த 2024-2025-ஆம் ஆண்டில் சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிா் முகவா்கள் மற்றும் நிலை முகவா்களுக்கு தேசிய சேமிப்பு பத்திரம்,பாராட்டுச் சான்றிதழ்,கேடயம் ஆகியனவற்றையும் வழங்கினாா்.
பின்னா் பள்ளிகளில் சிறுசேமிப்பு பற்றிய பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினாா்.