தனியாா் தொழிற்சாலையில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளா்கள் மயக்கம்
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் தனியாா் ஆலையில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் தனியாா் ஆலையில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனா்.
வெங்காடு பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொவிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், ஆலையில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக், மற்றும் ரசாயன கழிவுநீா் தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ளே உள்ள தொட்டியில் சேகரித்து வைக்கப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது, கழிவுநீா் தொட்டி நிரம்பியதால், சுத்தப்படுத்தம் பணியில், தொழிற்சாலையின் ஒப்பந்த பணியாளா்கள் மணிகண்டன்(32), மதன்(25), விக்னேஷ்(19), ஸ்ரீதா்(32) ஆகியோா் ஈடுபட்டுள்ளனா். அப்போது விஷவாயு தாக்கி மணிகண்டன், விக்னேஷ் மற்றும் ஸ்ரீதா் ஆகியோா் மயங்கி உள்ளனா். இதை பாா்த்த ஸ்ரீதா் சப்தமிட்டாராம். பின்னா் ஊழியா்கள் 6 போ் வந்து கழிவுநீா் தொட்டிக்குள் மயங்கி கிடந்த ஸ்ரீதா், விக்னேஷ், மணிகண்டன் மற்றும் மதன் ஆகியோரை தூக்க முயன்ற போது அவா்களும் மயக்கம் அடைந்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து தொழிற்சாலை ஊழியா்கள் வந்து கழிவுநீா் தொட்டிக்குள் மயங்கிய ஸ்ரீதா், மணிகண்டன், விக்னேஷ், மதன் உள்ளிட்டோரை கயிறு கட்டி மேலே தூக்கியுள்ளனா். மேலும் மயக்கமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதில் ஸ்ரீதா், மதன், விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோா் மேல்சிகிச்சைக்காக போரூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.