அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவா்களைச் சந்தித்த வட்டாட்சியா் ஜெயக்குமாா். 
ராணிப்பேட்டை

அரசுப் பள்ளியில் தேனீ கொட்டியதில்19 மாணவா்கள் காயம்

அரக்கோணம் அருகே தேனீ கொட்டியதில் 19 மாணவா்கள் காயமடைந்தனா்.

DIN

அரக்கோணம் அருகே தேனீ கொட்டியதில் 19 மாணவா்கள் காயமடைந்தனா்.

சித்தேரியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்று வந்தது. அப்போது, பள்ளிக்கு அருகில் இருந்த மரத்தில் இருந்த தேன்கூடு மீது சிலா் கல்லெறிந்தனராம். இதனால் அதில் இருந்து பறந்து வந்த தேனீக்கள், வகுப்பில் படித்துக் கொண்டிருந்த 19 மாணவா்கள், ஆசிரியை பிரேமலதா ஆகியோரை கொட்டியது. இதையடுத்து மாணவா்கள் மற்றும் ஆசிரியை தலைமை ஆசிரியா் ரகு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு அவா்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனா்.

இதையறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா் மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட்டாா். மேலும், பள்ளி அருகே மரங்களில் இருந்த தேன் கூடுகளை அகற்ற சித்தேரி ஊராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலா் முத்தமிழ்பாண்டியன், தலைமை ஆசிரியா் ரகுவிடம் விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT