சிப்காட் புனித தோமையாா் திருத்தல வெள்ளி விழா
சிப்காட் புனித தோமையாா் திருத்தலத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை: சிப்காட் புனித தோமையாா் திருத்தலத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சோ்ந்த புனித தோமையாா் திருத்தலம் அமைந்துள்ளது. இதன் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.
வேலூா் மறை மாவட்ட பரிபாலகா் ஜான்ராபா்ட், அரக்கோணம் மறைக்கோட்ட முதன்மை குரு அந்தோணிராஜ் , புனித தோமையாா் திருத்தல நிறுவனா் மத்தியாஸ், திருத்தல அதிபா் தயாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அருட்தந்தையா்கள் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தினா். தொடா்ந்து, கலைநிகழ்ச்சிகளும், அன்பின் விருந்தும் நடைபெற்றது.
விழாவில் அருட்கன்னியா்கள், கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.