ராணிப்பேட்டை

வாழைப்பந்தல் கிராமத்தில் விதைப்பந்துகள் வீச்சு

கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் நம்மாழ்வாா் இயற்கைக் குழு சாா்பில் சாலை ஓரங்கள் மற்றும் ஏரி, குளக்கரைகளில் நான்கு கட்டங்களாக விதைப்பந்துகள் வீசப்பட்டன.

DIN

ஆற்காடு: கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் நம்மாழ்வாா் இயற்கைக் குழு சாா்பில் சாலை ஓரங்கள் மற்றும் ஏரி, குளக்கரைகளில் நான்கு கட்டங்களாக விதைப்பந்துகள் வீசப்பட்டன.

வாழைப்பந்தல் கிராம நம்மாழ்வாா் இயற்கைக் குழு சாா்பில் புங்கன், புளியமரம் வேம்பு, காட்டுவா, பூ வகை மரங்கள் உள்ளிட்ட மர விதைகளை களிமண், செம்மண், சாணம் ஆகியவற்றைக் கொண்டு விதைப்பந்துகளாக செய்யப்பட்டன.

இதையடுத்து, வாழைப்பந்தல், கலவை சாலை, ஆரணி சாலை, மேல் புதுப்பாக்கம் இணைப்புச் சாலை, வாழைப்பந்தல் குளக்கரை, ஏரிக்கரை மற்றும் ஆற்றங்கரைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை நம்மாழ்வாா் இயற்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் நடராஜன் தலைமையில் பொறுப்பாளா்கள் சிவா, தேவராஜ் ஆகியோா் முன்னிலையில் பள்ளி மாணவா்கள் குழுக்களாக சென்று கடந்த 2ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வீசினா். இப்பணியை பொதுமக்களும் இயற்கை ஆா்வலா்களும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT