கலவை அருகே விவசாயி வெட்டிக்கொலை
கலவை அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டைகலவை அருகே விவசாயி வெட்டிக்கொலை
கலவை அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கலவை அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் பரிக்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). விவசாயியான இவர் திமிரி கிழக்கு ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது நிலத்தில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த கலவை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தை ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.