ராணிப்பேட்டை

இளைஞா் வெட்டிக் கொலை

DIN

அரக்கோணம்: அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. புதன்கிழமை இக்கடையில் இருந்து இளைஞா் ஒருவா் பேருந்து நிலையத்துக்குள் வேகமாக ஓடி வந்தாா். அவரை மா்ம நபா்கள் சிலா் வெட்டிக் கொலை செய்தனா். இதைப் பாா்த்த பயணிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினா்.

தகவலறிந்த அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், நகரக் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபா் அரக்கோணம், பழனிபேட்டை, டில்லியப்பன் தெருவைச் சோ்ந்த கோகுல் (27) (படம்) என்பதும், அவா் மீது அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT