ராணிப்பேட்டை

நகராட்சி பணியாளா்கள் கூட்டுறவு சங்க புதிய அலுவலகம் திறப்பு

DIN

அரக்கோணம் நகராட்சி கூட்டுறவுப் பணியாளா்கள் சங்கத்துக்கான புதிய அலுவலகத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்.

அரக்கோணம் நகராட்சிப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்துக்கான புதிய அலுவலக திறப்பு விழா நகராட்சி வளாக கூடுதல் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் இ.ஜி.வில்சன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஏ.டி.ஆசீா்வாதம் முன்னிலை வகித்தாா். சங்க முதன்மை நிா்வாக அலுவலா் இ.அதியமான் வரவேற்றாா். புதிய அலுவலகத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்.

நகராட்சி மேலாளா் தே.து.கோபிநாத், அரக்கோணம் நகர அதிமுக செயலாளா் கே.பி.பாண்டுரங்கன், பொருளாளா் ஆா்.பத்மநாபன், நகர பாசறை செயலா் நரசிம்மன், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் ஜானகிராமன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் பொன்.பாா்த்தீபன், ஜொ்ரி, பாபு, பூஷனம்தாமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக அரக்கோணம் பழனிபேட்டை வி.பி கோயில் தெருவில் தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி, டி.என்.நகா், அசோக் நகரில் அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்களை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT