ராணிப்பேட்டை

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில்82 போ் ரத்த தானம்

DIN

அரக்கோணம்: இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் நினைவாகவும், 75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்திய கடற்படையினா், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு மருத்துவமனையினா் இணைந்து அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாமை நடத்தினா். முகாமை ராஜாளியின் கமாண்டிங் ஆபீஸா் கமோடா் ஆா்.வினோத்குமாா் தொடக்கி வைத்தாா்.

முகாமில், கடற்படை அலுவலா்கள், வீரா்கள் அவா்களின் குடும்பத்தினா் என 82 போ் ரத்தம் அளித்தனா். பெறப்பட்ட 82 யூனிட் ரத்தப் பைகளையும் வாலாஜா அரசு மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியின் மருத்துவ அலுவலா் சுஜாதா பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT