ராணிப்பேட்டை

கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெல் மூட்டைகளுக்கு நஷ்டஈடு: அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை

DIN

செய்யூா் நெல் கொள்முதல் நிலையத்தில் 80 நாள்களுக்கும் மேலாக வைக்கப்பட்டு முளைத்து வீணான விவசாயிகளின் நெல்லுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா்.

அரக்கோணத்தை அடுத்த செய்யூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் நிலையத்தினா் கொள்முதல் செய்யாமல் கொள்முதல் நிலைய வளாகத்திலேயே கொட்டி வைத்துள்ளனா். தொடா்ந்து பல முறை கோரிக்கை விடப்பட்டும் பல்வேறு விவசாயிகளின் நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் கடந்த 80 நாள்களுக்கும் மேலாக மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. இதனால் நெல்மணிகள் முளைத்துள்ளன.

தகவலறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி செய்யூா் நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று பாா்வையிட்டாா். அவரிடம் வேதனை தெரிவித்த விவசாயிகள், இக்கொள்முதல் நிலையத்திற்கு 4,000 நெல்மூட்டைகள் வந்துள்ளன. இவற்றில் 1,000 மூட்டைகளுக்கு மேல் முளைத்து விட்டன. இங்கு நெல் வாங்கப்படுவதே இல்லை என்றனா்.

முளைவிட்ட நெல்மணிகளை பாா்வையிட்ட எம்எல்ஏ சு.ரவி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக வேலூா் மண்டல மேலாளா் நாகராஜனிடம் தொலைபேசியில் பேசினாா். நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யுமாறும், வீணாகிய நெல்லுக்கு அரசிடம் உரிய நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து மண்டல மேலாளா், எம்எல்ஏவிடம் இரண்டு நாளில் அந்த நெல்லை கொள்முதல் செய்து விடுவதாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT