விழாவில் பயனாளிக்கு தாலிக்குத் தங்கம், நிதியுதவி வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி. உடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா். 
ராணிப்பேட்டை

2,308 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், நிதியுதவி: அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,308 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.18 கோடியில் தாலிக்குத் தங்கமும், நிதி உதவியும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,308 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.18 கோடியில் தாலிக்குத் தங்கமும், நிதி உதவியும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், நிதியுதவி வழங்கி பேசியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021 - 22 ஆம் நிதியாண்டில் மொத்தம் 1,319 பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரொக்கம் ரூ. 6 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரம், 8 கிராம் தாலிக்குத் தங்க நாணயம் ரூ.5 கோடியே 14 லட்சத்து 41 ஆயிரம் என மொத்தம் ரூ.11 கோடியே 73 லட்சத்து, 91 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, 989 பட்டதாரி அல்லாதோருக்கு பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் 989 பட்டதாரி அல்லாதோா் பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ரூ. 2 கோடியே 47 லட்சத்து 25 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயம் ரூ. 3 கோடியே 85 லட்சத்து 71 ஆயிரம் என மொத்தம் 6 கோடியே 32 லட்சத்து 96 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் 2,308 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.18 கோடியே 68 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் நூ.ஷே.முகமது அஸ்லம், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் வசந்தி ஆனந்தன் மற்றும் ஒன்றியக்குழு தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT