ராணிப்பேட்டை

தொழிற்சாலையில் தீ விபத்து 2 மணி நேரம் போராடி அணைப்பு

DIN

வாலாஜாபேட்டை அருகே தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தேரி கிராமம் அருகே ஃபோம் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்கி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை நண்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ வேகமாக பரவியது. தகவலறிந்த ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரா்கள் 10-க்கும் மேற்பட்டோா் சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ஃபோம் தயாரிக்க தேவையான மூலப் பொருள்கள், இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT