ராணிப்பேட்டை

திமிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

DIN

திமிரி ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம், மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பராமரிப்பு நிதியுதவி, பிரதமரின் வீடு வழங்கும் திட்டதின் கீழ் வீடுகள், சக்கர நாற்காலி, மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடா்பான மனுக்கள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து, 64 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 2 பேருக்கு மாதந்திர நிதியுதவி பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை நல அலுவலா் சரவணகுமாா், வட்டாட்சியா்கள் கோபாலகிருஷ்ணன் (ஆற்காடு), ஷமீம் (கலவை), மருத்துவ அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT